பாத்ரூமில் குளிக்க சென்ற போது மின்சாரம் தாக்கி பள்ளிக்கூட ஆசிரியை பலி..

கோவை என்.எச் .ரோடு ,சந்திரன் வீதியைச் சேர்ந்தவர் குதாரத்துல்லா , இவரது மனைவி முபாரக் ஜான் ( வயது 40) இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் இந்தி ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார் .நேற்று இவரது வீட்டிலுள்ள பாத்ரூமில் குளிக்க சென்ற போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார் .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.