பிளேவுட் குடோனில் திடீர் தீ விபத்து – ரூ 4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்..!

கோவை தெற்கு உக்கடம் , ஜி .எம் .நகரை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 38 )இவர் தனது நண்பர் அசாருதீனுடன் சேர்ந்து தெற்கு உக்கடம் ,ரோஸ் பார்க், 3-வது வீதியில் மரக்கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது மரக் குடோனில் திடீரென்று தீப்பிடித்தது. இதில் குடோனில் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மரங்கள் எரிந்து சேதமடைந்ததது.தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயைணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து கடைவீதி காவல் நிலையத்தில் முஸ்தபா புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.