பவானி ஆற்றில் குதித்து பெண் தற்கொலை..

கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள பெரிய புத்தூர், அன்னூர் ரோட்டை சேர்ந்தவர் குமாரசாமி. அவரது மனைவி சரஸ்வதி ( வயது 60 )இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கு சிகிச்சை பெற்றும் குணம் அடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சரஸ்வதி நேற்று உடுமலையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றில் சரஸ்வதி நேற்று பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் மகள் உதய பானு புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நவநீத் கிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் .மேலும் விசாரணை நடந்து வருகிறது.