தெருக் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது மூதாட்டியிடம் நகை பறித்து கொண்டு ஓடிய மர்ம நபர்..!

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெல்லாதியை சேர்ந்தவர் கண்ணம்மாள்( வயது 68) இவர் வீட்டின் அருகே குடிநீர் குழாயில் நேற்று தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார் . அப்போது அவர் அணிந்திருந்து 2 பவுன் தங்க சங்கலியை குழாயில் சிக்கி அறுந்து கீழே விழுந்தது. அதை கண்ணம்மாள் எடுக்க முயன்றார். அப்போது குழாய்க்கு தண்ணீர் குடிக்க வந்த ஒரு வாலிபர் அந்த நகையை எடுத்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கண்ணம்மாள் காரமடை போலீசில் புகார் செய்தார் .போலீசார் தப்பி ஓடிய அந்த ஆசாமியை தேடி வருகிறார்கள..