ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.!!

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாநில மைய முடிவின்படி மாவட்டத் தலைவர் பழனி குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைந்து அனைத்து தாலுகா அலுவலகம் முன்பாக
உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட்டாட்சியரை, உள்நோக்கத்தோடு அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவரின் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் , பெண் அலுவலர்களை ஒருமையில் தரக்குறைவாக பேசி அரசு நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகளை அத்துமீறி செய்து வரும் சட்டமன்ற உறுப்பினரை கண்டித்தும் மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் அந்தந்த வட்டக்கிளை தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது..