வீட்டில் புகுந்து இளம் பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி – வாலிபருக்கு தர்ம அடி..!

கோவை ராமநாதபுரம், ஒலம்பஸ், 80 அடி ரோட்டில் உள்ள அருணாச்சல தேவர் காலனியைச் சேர்ந்தவர் விஜய் .அவரது மனைவி தனலட்சுமி (வயது 19)இவரது வீட்டின் அருகில் தர்மபுரி மாவட்டம் முத்தம்பட்டியை சேர்ந்த ஆனந்த் (வயது 21) என்பவர் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார் .நேற்று விஜய் வேலைக்கு சென்று விட்டார். இவரது மனைவி தனலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஆனந்த் அவரது வீட்டில் புகுந்து கட்டிப்பிடிக்க முயன்றாராம். உடனே தனலட்சுமி சத்தம் போட்டார்.சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து அவருக்கு தர்ம அடி கொடுத்து ராமநாதபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் ஆனந்தை கைது செய்தனர். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மானபங்க முயற்சி, கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.