அண்ணா நகரில் ஒரு கிலோ 270 கிராம் கஞ்சா, உடல் வலி மாத்திரைகள் 1514 பறிமுதல் – 5 பேர் கைது..!

சென்னை மாநகரில் போதையில்லா நகராக மாற்றிட சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான அதிரடி போலீஸ் படையினர் அண்ணா நகர் டவர் பார்க் அருகே ஐயப்பன் கோவில் சாலையில் கண்காணித்துக் கொண்டிருந்த போது கஞ்சா மற்றும் உடல் வலி நிவாரண மாத்திரைகள் விற்பனைக்காக வைத்திருந்த 1. அமீத் பர்கி வயது 23 தகப்பனார் பெயர் அமர்பர்கி பத்தாவது மெயின் ரோடு அண்ணா நகர் சென்னை 2. முகமது அமன் வயது 23 தகப்பனார் பெயர் முகமது சபி த் என்.எஸ்.கே நகர் அமைந்தகரை சென்னை 3. ராஜிப் சர்கார் வயது 22 தகப்பனார் பெயர் மனோஜ் குமார் சர்கார் 3 வது மெயின் ரோடு ஏ பி பிளாக் அண்ணா நகர் சென்னை 4. மங்கள் குருன் வயது 33 கல்பனா பெயர் விஷ்ணு குரூன் பெருமாள் கோவில் தெரு நெற்குன்றம் சென்னை 5. பி பேக் க் ராய் வயது 20 தகப்பனார் பெயர் அமித் ராய் 3 வது மெயின் ரோடு ஏபி பிளாக் இவர்களிடமிருந்து ஒரு கிலோ 270 கிராம் கஞ்சா 1514 உடல் வலி நிவாரண மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அமீத் பர்கி மற்றும் ராஜீப் சர்கார் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது .குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்ட பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்..