காதல் தோல்வி: விடுதியில் இளம்பெண் தற்கொலை..!

கோவை :புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பக்கம் உள்ள கருத்தம்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி இவரது மகள் செல்வி அபிநயா (வயது 21)இவர் கோவை பீளமேட்டில் மனிஷ் தியேட்டர் அருகே உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி இருந்து அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் வேலை செய்யும்நிறுவனத்தில் பணி புரியும்ஒரு வாலிபரை காதலித்து வந்தாராம்.இந்த நிலையில் நேற்று செல்வி அபிநயா அவர் தங்கி இருந்த அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார், அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர் .அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று மாலை இறந்தார் .இவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா?அல்லது காதலனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா?என்பது தெரியவில்லை.. இது குறித்து அவரது தந்தை சுப்பிரமணி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.