தீயில் கருகி மூதாட்டி பரிதாப பலி..

கோவை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி,கள்ளிமேடு தோட்டத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி இறந்துவிட்டார் .இவரது மனைவி மரகதம் ( வயது 70) இவர் நேற்று அங்குள்ள தோட்டத்தில் தென்னைமர கழிவுகளை தீவைத்து எரித்து கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக இவரது சேலையில் தீ பிடித்து உடல் முழுவதும் கருகியது. இவரை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது மகன் குணசேகரன் சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.