கோவையில் குடியிருப்பு கூரைமேல் குதித்த சிறுத்தையால் பரபரப்பு..

குடியிருப்பு கூரைமேல் குதித்த சிறுத்தையால் பரபரப்பு..

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் முதல் பிரிவு பகுதியில் நேற்று இரவு உலாவந்த சிறுத்தை அப்பகுதியிலுள்ள முன்னால் வனக்காப்பாளர் திருமலைச்சாமி என்பவரின் வீட்டு மேற்க்கூரைமேல் தாவிக்குதித்ததில் ஓடுகள் உடைந்து கீழே விழுந்ததில் கூரை சேதமடைந்தது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சிறுத்தையை சத்தம் போட்டு விரட்டியுள்ளனர் நல்லவேளையாக வீட்டின் வெளிப்புறத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெற வில்லை மேலும் அப்பகுதியில் தெருவிளக்குகள் எதுவும் கடந்த ஒரு வாரகாலமாக எரியாத நிலையில் இருள் சூழ்ந்து இருப்பதால் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.