சாலையின் குறுக்கே மான் ஓடியதால் பைக் மரத்தில் மோதி வாலிபர் பலி – 2 பேர் படுகாயம்..!

கோவை: மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள, தேக்கம்பட்டி வெல்ஸ் புரம், சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் .இவரது மகன் மிதுன் (வயது 20) இவர் நேற்று அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர்கள் சந்துரு, நிதின் குமார் ஆகியோருடன் பைக்கில் கணுவாய் பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பைக்கை சந்துரு ஓட்டினார். இவர்கள் இருவரும் பின்னால் இருந்து வந்தனர். அங்குள்ள யானைகள் முகாம் அருகே சென்ற போது திடீரென்று ரோட்டில் குறுக்கே மான் பாய்ந்தது.இதனால் சந்துரு திடீர் பிரேக் போட்டார்.பைக் நிலை தடுமாறி ரோடு ஓரத்தில் உள்ள மரத்தில் மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மிதுன் அதே இடத்தில் இறந்தார்.நிதின் குமார் சந்துரு ஆகியோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் குமார் பைக் ஓட்டி வந்த சந்துரு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.