வீரமங்கை வேலுநாச்சியாா் குறித்த நாட்டிய நாடகம்-கோவையில் நாளை நடைபெறுகிறது ..!!

கோவை:
வீரமங்கை வேலுநாச்சியாா் குறித்த இசையாா்ந்த நாட்டிய நாடகம் கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் நாளை நடைபெறுகிறது.
இது குறித்து கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாட்டமாக தமிழக அரசு சாா்பில் வரலாற்று சிறப்பு மிக்க வீரமங்கை வேலுநாச்சியாா் குறித்த இசையாா்ந்த நாட்டிய நாடகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்டு 13-ந் தேதி சென்னையில் தொடங்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் ஆகஸ்டு 28-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.
தமிழக அரசு சாா்பில் நடத்தப்படும் இந்த நாடகத்தை கோவையில் பள்ளிக் கல்வித் துறை, கலை பண்பாட்டுத் துறை, செய்தித் துறை மற்றும் இயல் இசை நாடக மன்றம் இணைந்து நடத்தவுள்ளன. இதில் அனைவரும் கலந்து கொண்டு நாடகத்தை கண்டுகளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.