விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம்..!

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜமாத் அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து இன்று இந்து அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் வரும் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்கள் மற்றும் கோவில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு இந்து அமைப்பினரும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். விசர்ஜன ஊர்வலத்தின்போது எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்காதவாறு செல்ல வேண்டும். விதிமுறைகளை மீறி கூடுதல் சிலைகளை வைக்க கூடாது. மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதில் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.