கோவை பஸ் ஸ்டாப்பில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது..!

கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் நேற்று இரவு கோவை அரசு மருத்துவமனை எதிர்புறம் உள்ள பஸ் ஸ்டாண்டில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் நின்று கொண்டு கஞ்சா விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார் . அவரிடம் இருந்து 800 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பக்கம் உள்ள செங்காட்டைச் சேர்ந்த ஹரி (வயது 19) என்பது தெரியவந்தது.

இதே போல குனியமுத்தூர் போலீசார் நேற்று அங்குள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கூடம் பின்புறம் ரோந்து சுற்றி வந்தனர் அப்போது கஞ்சா விற்றதாக பிஸ்மி நகரை சேர்ந்த அசாருதீன் ( வயது 30) குனியமுத்தூர் , லவ்லி கார்டனைச் சேர்ந்த சர்புதீன் (வயது 32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முஜிபூர் ரஹ்மான் என்பவர் தப்பி ஓடி விட்டார். இவர்களிடமிருந்து 470 கிராம் கஞ்சா 2 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது..