ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி கோவை பெண்ணிடம் ரூ.19 லட்சம் நூதன மோசடி..!.

கோவை பீளமேடு , தண்ணீர் பந்தல் ரோடு லட்சுமி கார்டனைச் சேர்ந்தவர் பாரதிராஜா. இவரது மனைவி யாருள் பிரதி (வயது 34 )இவர் 27- 1- 20 23 அன்று வாட்ஸ்அப் மூலம் ஒரு தகவல் வந்தது. இதில் தொடர்பு கொண்ட நபர் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டினாராம்..இதை நம்பிய அவர் ரூ. 19 லட்சத்து 7,969 அனுப்பி வைத்தாராம். அந்த பணத்தை அந்த நபர் மோசடி செய்து விட்டார். இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.