ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் தங்க செயின் திருட்டு.!

கோவை ஆர் .எஸ். புரம். அருணாச்சலம் ரோட்டை சேர்ந்தவர் மயில்சாமி. இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி யசோதா (வயது65 )நேற்று இவர் டவுன் பஸ்சில் பூ மார்க்கெட்டில் இருந்து சாய்பாபா காலனி சென்று கொண்டிருந்தார். அப்போது யாரோ இவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை திருடிவிட்டனர். இதுகுறித்து யசோதா சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.