வேகத்தடையில் திடீர் பிரேக் போட்டதால் பைக்கில் இருந்து விழுந்து துணி வியாபாரி பலி..

வேகத்தடையில் திடீர் பிரேக் போட்டதால் பைக்கில் இருந்து விழுந்து துணி வியாபாரி பலி.. பல்லடம் அருகே உள்ள இச்சிப்பட்டி காங்கேயம் பாளையத்தைச் சேர்ந்தவர் தங்கவேலு ( வயது 51) டெக்ஸ்டைல் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று காடம்பாடி இச்சிப் பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள வேகத்தடையை பார்த்ததும் திடீர் பிரேக் போட்டார். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் இறந்தார்.பைக்கில் பின்னால் இருந்து வந்த தேவராம் பாளையத்தை சேர்ந்த இளங்கோ(வயது 57) படுகாயத்துடன் சூலூரில்உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து சூலூர் போலீசில்புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.