தனியார் மருத்துவமனையில் புகுந்து 4 பவுன் செயின் திருட்டு..! 

தனியார் மருத்துவமனையில் புகுந்து 4 பவுன் செயின் திருட்டு..!  கோவை மாவட்ட அன்னூர் பக்கம் உள்ள மந்திரி பாளையத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 37) இவரது தாயார் கலைச்செல்வி .இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ளதனியார் மருத்துவமனையில்கால் வலிக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவத்தன்று இவரது அறையில் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் செயினை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து லோகேஸ்வரன் காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.