தொடர்ந்து புதையும் நகரம்… ஜோஷிமத் அழிவு மண்டலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது..!

நிலச்சரிவு-அழிவு மண்டலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜோஷிமத்தில் சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் 60 குடும்பங்கள் தற்காலிக நிவாரண மையங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

வசிக்கத் தகுதியற்ற 610 வீடுகளில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. ஊரில் நான்கைந்து இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 90க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் வெளியேற்றப்படவில்லை.