பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவுரைகள்..!

மிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடர்பான முக்கிய அறிவுரைகளை மண்டல இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ளார்.

  • நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • பொங்கல் பொருட்களுக்கு என தனியே பெறப்பட்ட (White Colour Bag) அரிசி மற்றும் சர்க்கரை மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும்.
  • ஏற்கனவே இருப்பில் உள்ள பச்சரிசி விதியோகம் செய்தல் கூடாது
  • பொங்கல் பண்டிகைக்காக புதிய சன்னரக அரிசி Super fine நகர்வு செய்யப்பட்ட அரிசி மட்டுமே பொங்கல் தொகுப்பிற்கு வழங்க வேண்டும்.
  • அனைத்து அரிசி மூட்டைகளையும் குத்தூசி மூலம் அரசியின் தரத்தினை இன்றே சரிபார்க்க வேண்டும். பொருட்கள் விநியோகத்தின் போது குறை காணப்பட்டால் மாற்று அரிசி வழங்கிட இயலாத நிலை ஏற்படும் தரமான அரிசி வழங்கிடுவதை உறுதி செய்திட வேண்டும்.
  • 100 சதவீதம் தரத்தில் எவ்வித சமரசமும் செய்ய கூடாது.
  • அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் புதிய பச்சரிசி வழங்கப்பட்டுள்ளதால் இதில் வண்டு, செல் பூச்சி எளிதில் பிற மூட்டைகளில் இருந்து இதற்கு பரவி விட வாய்ப்புள்ளது. இதனை தனியே பாதுகாப்பாக வைத்திட வேண்டும்.
  • பச்சரிசியில் பூச்சி எளிதில் உற்பத்தி ஆகிவிடும் என்பதால் இதனில் கவனம் தேவை என்பதை விற்பனையாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
  • அதிக பூச்சி / வண்டுகள் காணப்படும் பச்சரிசியினை உடன் மாற்றம் செய்து தரமான அரிசி விதியோகம் செய்வதை உறுதி செயது கொள்ள வேண்டும்.                                                                    சர்க்கரை விநியோகம் தொடர்பில் இதற்கென தனியே பெறப்பட்ட சர்க்கரை மட்டுமே                பொங்கல்  பரிசுத் தொகுப்பில் வழங்க வேண்டும்.
  • தூய்மையான, வெண்மை நிறம் கொண்ட சர்க்கரை 100% அனைத்து கடைகளுக்கும் நகர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை மட்டுமே பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பயன்படுத்திட வேண்டும்.
  • சர்க்கரையின் தரமும் உறுதி செய்து கொள்ள வேண்டும். பழுப்பு நிற சர்க்கரை, மாவு போன்ற சர்க்கரை போன்றவற்றை விநியோகம் செய்தல் கூடாது.
  • நியாய விலைக் கடைகளுக்கு 100 % கரும்பு நகர்வு செய்திட வேண்டும். எண்ணிக்கையில் குறைவு இருக்க கூடாது. அதிகமாக இருக்கலாம் ஆனால் குறைவு கண்டிப்பாக இருக்க கூடாது.
  • கரும்பின் தரத்தில் எவ்வித சமரசமும் செய்யக் கூடாது.
  • 6 அடி அல்லது 6 அடிக்கு மேல் உள்ள கரும்பு மட்டுமே பொது மக்களுக்கு விநியோகம் செய்திட வேண்டும்.
  • எக்காரணத்தைக் கொண்டும் 6 அடிக்கு குறைவான கரும்புகளை விநோயகம் செய்யக் கூடாது. அதனை தனியே பிரித்து வைத்து விட வேண்டும். இதனை விநியோகம் செய்யக் கூடாது. மேலும், இது பொது மக்களின் பார்வைக்குபடும்படி வைத்து தேவையில்லா பிரச்சனைகளுக்கு வழிவகுக்ககூடாது.
  • நோயுள்ள, செல்லரித்த பிடித்த கோந்தாளை கரும்புகள் விநியோகம் செய்யக் கூடாது.
  • கரும்பு சோகையுடன் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மொத்த உயரம் 10 அடி அல்லது அதற்கு மேல் இருக்க கூடும். மின் கம்பங்கள் அருகில் உள்ள நியாய விலைக் கடைகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். current shock விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
  • இது குறித்த விழிப்புணர்வை ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தெளிவாக எடுத்து கூற வேண்டும். எவ்வித அசம்பாவிதங்களும், விபத்துகளும் ஏற்பட கூடாது
  • ஒரு வாரம் வரையிலும் கரும்பு இருப்பில் உள்ள நிலை உள்ளதால் கரும்பு சோகைகள் காய்ந்து போகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனை ஈர சாக்கு போர்த்தி தினமும் தண்ணீர் தெளித்து பாதுகாப்பு செய்திட வேண்டும்.
  • நியாய விலைக் கடைகளிலுள்ள கரும்புகள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பொது வெளியில் உள்ள கரும்புகள் களவு போகாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் முழுமையாக ரொக்கம் விநியோகம் செய்திட ஏதுவாக சங்கங்களுக்கு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இத்தொகை தினசரி தேவையான அளவிற்கு அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • ரொக்கத்தை உரிய நபர்களிடம் மட்டுமே வழங்க வேண்டும். மிகவும் வயதான, உடல் நலமற்றவர்கணைப் பொருத்தவரையில் proxy முறையில் வழங்கலாம்
  • இரண்டு ரூ.500 தாள்கள் மட்டுமே வழங்க வேண்டும். சில்லறை மாற்றித் தர கூடாது.
  • அனைவரும் பார்க்கும் படி கையில் தர வேண்டும். கவரில் வைத்து தர கூடாது.
  • தொகை வழங்கும் போது திசை திருப்பி திருட முயற்சிக்கலாம் கவனமாக செயல்பட வேண்டும்.
  • விநியோகம் செய்ய ஒரு நாளைக்கு தேவையான தொகை முறையாக வழங்க வேண்டும்.
  • ஒவ்வொரு தியாய விலைக்கடைக்கும் சங்க பணியாளர் ஒருவரை மேற்பார்வையாளராக நியமிக்க வேண்டும். அனைத்து பொருட்கள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை விநியோகிக்கும் பணியினை கண்காணிக்க வேண்டும்.
  • சங்கச் செயலளர்கள்/ மேலாளர்கள் அனைத்து நியாய விலைக் கடைகளையும் தினசரி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

 

  • 09.01.2023 காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள்  தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் துவக்கிய பின்னரே அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்ய ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக விநியோகம் செய்தல் கூடாது.
  • 09.01.2023 முதல் 12.01.2023 ஆகிய தேதிகளுக்குள் விடுபட்டவர்கள முழுமையாக விநியோகம் செய்திட வேண்டும்.
  • அடிப்படை வசதிகள் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பொது மக்களுக்கு தேவையான தண்ணீர் வசதி செய்து தர வேண்டும்.
  • மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், மூத்த குடிமக்கள், உடல் முடியாதவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விநியோகம் செய்ய வேண்டும்.
  • தினமும் 200 முதல் 350 வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க டோக்கன் விநியோகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் மாற்றுத் தேதி டோக்கன் கொண்டு எவரேனும் வந்தால் அவருக்கு இல்லை என்று சொல்லாமல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் மற்றும் ரொக்கம் விநியோகம் செய்ய வேண்டும்.
  • வேறு தேதிக்கு வா என்று சொல்லக் கூடாது.
  • குடும்ப அட்டைதாரர்களுடன் அன்புடன், கனிவுடன் பேச வேண்டும்.
  • எந்தவித வாக்குவாதமும் செய்யக் கூடாது.
  • வேண்டுமென்ற எவரேனும் பிரச்சனை செய்ய முற்பட்டாலும் களிவுடன் பேசி எவ்வித அசாதாரண சூழ்நிலையினை ஏற்படுத்திவிடாமல் பார்த்துக கொள்ள வேண்டும்.
  • மாவட்ட அளவில், வட்டார அளவில் ஆய்வுக் குழுக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மண்டல இணைப்பதிவாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தினமும் குழுக்களாக ஆய்வுப்பணி மேற்கொண்டு விநியோகத்தை கண்காணிக்க வேண்டும்.
  • பொங்கல் பரிகத் தொகுப்பு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ரொக்கம் ரூ.1000 ஆகியவை ஒவ்வொரு கடைக்கும் சென்று சேர்ந்ததை ஒவ்வொரு சங்க செயலாளர்கள் / மேலாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • பொங்கல் பரிசுத் தொகுப்பு விதியோகம் தொடர்பாக ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படின் உடனுக்குடன் கள அலுவலர் கூட்டுறவு சார் பதிவாள (பொவிதி) கூட்டுறவு சார் பதிவாளர் / கள் அலுவலர், துணைப்பதிவாளர் (பொவிதி) ஆகியோருக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் மற்றும் கரும்பு நல்லமுறையில் மக்களுக்கு சென்றடைவதை கட்டாயம் அனைவரும் உறுதி செய்து வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.