கோவை இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை.. மத்திய அரசு அதிகாரி, 2 டாக்டர்கள் மீது புகார்..!

கோவை சிங்காநல்லூர், உப்பிலிபாளையம், காமராஜர் ரோட்டை சேர்ந்தவர் நித்யஸ்ரீ (வயது 24 ) இவருக்கும் பி.என்.புதூர் பி .ஆர். நகரை சேர்ந்த டாக்டர்.குலசேகர் மகன் சோனிஸ் ( வயது 30) என்பவருக்கும் 3 – 4 -20 22 அன்று திருமணம் நடந்தது.சோனிஸ், சட்டீஸ்கர் மாநிலத்தில் மத்திய உளவு பிரிவில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.இவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அப்போது கணவர் சோனிஸ் தினமும் குடித்து விட்டு வந்து மனைவி நித்திய ஸ்ரீயிடம் தகராறு செய்வாராம் .இந்த நிலையில் நித்திய ஸ்ரீ அங்கிருந்து பி.என்.புதூர், பி .ஆர். நகரில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு வந்து விட்டார்.கணவர் வீட்டில் அவரது மாமனார் டாக்டர் குலசேகர் மாமியார் டாக்டர் புனிதவதி ஆகியோர் அவரிடம் பெற்றோர் வீட்டுக்கு செல்லுமாறு தகராறு செய்தார்களாம். இது குறித்து நித்திய ஸ்ரீ கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளீர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கணவர் கோனிஸ் ,மாமனார் டாக்டர், குலசேகர் மாமியார் டாக்டர் புனிதவதி ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..