கோவை பேரூர் அருகே நரசீபுரம் பகுதியில் யானை தாக்கி 73 வயது முதியவர் பலி

கோவை பேரூர் அருகே நரசீபுரம் பகுதியில் யானை தாக்கி 73 வயது முதியவர் பலி

கோவை பேரூர் அருகே போளூவாம்பட்டி வனச் சரகம் நரசீபுரம் பிரிவு பகுதியில் விராலியூர் இந்திரா காலனியைச் சேர்ந்த 73 வயது சின்னகுட்டி என்ற முதியவர் அங்கு உள்ள வனப்பகுதி ஒட்டியுள்ள பகுதிக்கு காலை 5 மணிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்ற போது ஒற்றை காட்டு யானை தாக்கி காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் ஆல்பா குழு வன பணியாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் உடனடியாக அங்கு சென்று மேலும் ஆலாந்துறை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆலாந்துறை காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.