முதல் கள்ளக்காதலனை பிரிந்து 2வது கள்ளக்காதலுடன் 15 நாட்கள் வாழ்ந்து பின் மீண்டும் முதல் கள்ளக்காதலனிடம் திரும்பி வந்த பெண் தற்கொலை.!

கோவை சூலூர் அருகே உள்ள காத்தாடி கடவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி தேவி (வயது 49). கூலித்தொழிலாளி. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ராமச்சந்திரன் இறந்துவிட்டார். அதன் பின்னர் தேவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் (44) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் தேவிக்கு, முருகன் என்பருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு தேவி, முருகனுடன் சென்றார். பின்னர் 15 நாட்களுக்கு முன்பு மீண்டும் ராஜகோபால் வீட்டிற்கு திரும்பி வந்து அவருடன் வசித்து வந்தார். ராஜகோபாலை பிரிந்து முருகனுடன் சென்றதால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து தேவி விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர். அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.