உயர்ரக போதை பொருள் விற்பனை. ஐ.டி. ஊழியர் கைது…

பொள்ளாச்சி நகர கிழக்கு பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன்,சப்- இன்ஸ்பெக்டர்திருமலைசாமி ஆகியோர் நேற்று பொள்ளாச்சிஜோதி நகர் , ஏ காலனி நகராட்சி பூங்கா அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 1.3 கிராம் பெட்டமின் ” என்ற உயரகப் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்த செய்யது இப்ராஹிம் மகன் சுதீன் ( வயது 26) என்பது தெரிய வந்தது.அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் சென்னையைச் சேர்ந்த கோபி என்பவரிடமிருந்து இந்த உயர் ரகபோதை பொருட்களை வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது..இது தொடர்பாக கோபியையும் போலீசார் தேடி வருகிறார்கள்.