கூல்டிரிங்ஸ் என நினைத்து கரையான் மருந்தை குடித்த 5 வயது சிறுவன் பலியான பரிதாபம்..

கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம், திலகர் விதியை சேர்ந்தவர் பிரகாஷ் | கலித்தொழிலாளி. இவரது மகன் தர்ஷித் (வயது 5) இவர்களது வீட்டில் குளிர்பான பாட்டிலில் கரையான் மருந்தை கலக்கி வைத்திருந்தனர்.அதை தர்ஷித் கூல்ட்ரிங்ஸ் என நினைத்து தவறுதலாக குடித்து விட்டான்.அவனை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தான்.இது குறித்து பிரகாஷ் ஆர் .எஸ். புரம். போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.