கோவை விமான நிலையத்தில் வங்காளதேச வாலிபர் கைது – தேசிய கீதம் பாடத் தெரியாததால் சிக்கினார்..!

கோவை: வங்காளதேசத்தை சேர்ந்தவர் அன்வர் உசைன் ( வயது 28) இவர் நேற்று சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் ஏர் அரேபியா விமானத்தில் கோவைக்கு வந்தார். கோவை விமான நிலையத்தில் விமான நிலைய குடியுரிமை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை சோதித்தனர் .அவர்களுக்கு இதில் சந்தேகம் எழுந்தது.பின்னர் அவரை தேசிய கீதம் பாட சொன்னார்கள். அவருக்கு பாடத் தெரியவில்லை.எனவே சந்தேகத்தின் பெயரில் போலீசார் அவரை கைது செய்தனர்.இவர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பாஸ்போர்ட் வாங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.மேலும் விசாரணை நடந்து வருகிறது.