94 வயது மூதாட்டி சாணிபவுடர் குடித்து தற்கொலை..

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலி கோனாம் பாளையம், ஆர். கே. கே. நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி பத்மாவதி அம்மாள் என்ற பார்வதி ( வயது 94 )இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் பார்வதி அம்மாள் தனது மகனுடன் வசித்து வந்தார். இவர் நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார் இதனால் மணமுடைந்த பார்வதி அம்மாள் நேற்று சாணிபவுடர் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து அவரது மகன் கோபால் (வயது 60) சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.