கோவை பஸ்சில் 2 பெண்களிடம் 7 பவுன் நகை கொள்ளை..!

கோவை போத்தனூர் செட்டிபாளையம் பக்கம் உள்ள பெரியகுயிலியை சேர்ந்தவர் நடராஜ் .இவரது மனைவி கவிதா மணி( வயது 41) நேற்று இவர் பெரிய குயிலியில் இருந்து டவுன் பஸ்சில் டவுனுக்கு வந்து கொண்டிருந்தார். டவுன்ஹால் பிரகாசம் பஸ் ஸ்டாப்பில் பஸ்சை விட்டு இறங்கும் போது இவர் கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்கச் செயினை காணவில்லை. யாரோ திருடி விட்டனர். இதுகுறித்து கடைவீதி காவல் நிலையத்தில் கவிதாமணி புகார் செய்தார் .

இதே போல வடகோவை ,இராமசாமி ரோட்டை சேர்ந்தவர் கட்டபொம்மன் .இவரது மனைவி சரஸ்வதி ( வயது 69) இவர் உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் பஸ்சில் வீடு திரும்பும் போது இவர் அணிந்திருந்த 3 பவுன் செயினை யாரோ திருடி விட்டனர் .இது குறித்து கடைவீதி காவல் நிலையத்தில் சரஸ்வதி புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.