எல்லை தாண்டி மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 6 பேர் கைது..!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் 5 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் எங்களை அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.

அப்போது தலைமன்னார், தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ஒரு விசைப் படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 6 தமிழக மீனவர்களை கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்குக் அழைத்துச் சென்றனர்.