கோவையில் கள்ளநோட்டு அச்சடித்த 5 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை..!

கோவை வேலாண்டிபாளையம், கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 31 )இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தடாகம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் .அவரை சாய்பாபா காலனி போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆனந்திடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதை ஆய்வு செய்த போது அனைத்தும் கள்ள நோட்டுகள் என்று தெரியவந்தது. இது தொடர்பாக அவரிடம் விசாரித்த போது அவர் வடவள்ளி மருதமலை ரோட்டை சேர்ந்த கீதார் முகமது (வயது 55) என்பவருடன் சேர்ந்து கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. இதற்காக வேலாண்டி பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கள்ள நோட்டுகளை தயாரித்ததும் தெரிய வந்தது. எனவே அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் இருந்து கணினி, பிரிண்டர், இங்க், பேப்பர்,உள்ளிட்ட மூல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனந்த், கிதார் முகமதுடன் சேர்ந்து காரமடையைச் சேர்ந்த சுந்தர்ராஜ் ,திருப்பூர் பெருமாநல்லூரைச் சேர்ந்தவிஜயகுமார் (வயது 33 )உதயபிரகாஷ் (வயது 33) கோவை சாய்பாபா காலனி சேர்ந்த ஹரிஹரன் ( வயது 42) திருப்பூர் ராஜேஷ் (வயது 30) ஆகிய 5 பேரும் கூட்டாளிகளாக செயல்பட்டு உள்ளனர்.அவர்களிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் மொத்தம் 5, 927பறிமுதல் செய்யப்பட்டது. இதைய டுத்து அந்த வழக்கு சிபி.சிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது .அதன் பேரில் அவர்கள் 7 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை குண்டுவெடிப்பு நீதிமன்றத்தில் நடந்தது .இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலு கள்ள நோட்டுகள அச்சடித்த ஆனந்த், கீதார் முகமது, சுந்தர்ராஜ், விஜயகுமார் உதய பிரகாஷ் ஆகிய 5 பேருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், விஜயகுமாருக்கு ரூ.7,500 ஆபராதமும், மற்றவர்களுக்கு ரூ. 12 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.ஹரிகரன் ராஜேஷ் ஆகிய 2 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜர் ஆனார்.