வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவர், மாமனார், மாமியார் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு ..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தமிழ்மணி நகரை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி சுவேதா ( வயது 29 )இவர்களுக்கு 13- 12- 20 21 அன்று திருமணம் நடந்தது.பின்னர் சுவேதாவை அவரது கணவர் பிரசாந்த், மாமனார் கோபால், மாமியார் திலகவதி, நாத்தனார் பிரிய லட்சுமி ஆகியோர் சேர்ந்து கொடுமைபடுத்தினார்களாம்.விவாகரத்து நோட்டீசும் அனுப்பினார்கள் .இதுகுறித்து சுவேதா கேட்டபோது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுவேதா பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கோப்பெருந் தேவி விசாரணை நடத்தி கணவர் பிரசாத் மாமனார் கோபால், மாமியார் திலகவதி, நாத்தனார் பிரியலட்சுமி ஆகியோர் மீது வரதட்சனை கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளார் .மேலும் விசாரணை நடந்து வருகிறது.