கோவை காருண்யா பல்கலைகழக வளாகத்தில் அடுத்தடுத்து மர்மான முறையில் இறந்த கிடந்த 4 காட்டு பன்றிகள்..!

கோவை காருண்யா பல்கலைகழக வளாகத்திற்குள் காட்டு பன்றிகள் இறந்து கிடப்பதாக மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் ஆய்வு செய்த போது, அடுத்தடுத்து 4 காட்டு பன்றிகள் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இறந்த காட்டு பன்றிகள் உடல் பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.