லிப்ட் அறுந்து விழுந்து 4 பேர் படுகாயம்..

கோவை ஆர். எஸ். புரம். பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது .இங்கு 10க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் லிப்டில் தரைத்தளத்துக்கு இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் அறுந்து கீழே விழுந்து நொறுங்கியது .இதில் லிப்ட்டுக்குள் சிக்கிய ஊழியர்கள் மனோஜ், காமராஜ், வினோத், ஆகியோர் படுகாயம் அடைந்தனர் . அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து லிப்டின் இடிபாட்டுக்குள் சிக்கிய 4 பேரையும் மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆர். எஸ் .புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது . போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர் . லிப்ட்டை முறையாக பராமரிக்காமல் அலட்சியமாக இருந்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து கட்டிட உரிமையாளரான கோவை ராஜவீதியை சேர்ந்த விஷால்(வயது 45) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.