தோட்டத்தில் புகுந்து ஆடு திருடிய 3 இளைஞர்கள் கைது..!

கோவை மாவட்டம் ,பொள்ளாச்சி, ஜமீன் முத்தூர்பக்கம் உள்ள நல்லூர்,புது காலனி சேர்ந்தவர் ஆறுமுகம் ( வயது 60) விவசாயி, இவரது தோட்டத்தில் உள்ள ஒரு ஆட்டை யாரோ திருடி சென்று விட்டனர் .இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் இருக்கும்.இது குறித்து ஆறுமுகம் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் வழக்கு பதிவு செய்து ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த மதன் பிரகாஷ் (வயது 19) அஜய் குமார் (வயது 19) வெங்கட் ரமணி (வயது 19) ஆகியோரை நேற்று கைது செய்தார். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.