கோவையில் ஒரே நாளில் 3 பேர் தூக்குபோட்டு தற்கொலை..

கோவை மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அதன் விவரம் வருமாறு:-கோவை சூலூர் பக்கம் உள்ள முத்து கவுண்டன் புதூரை. சேர்ந்தவர் ஜெயக்குமார்.காவலாளி. இவரது மகன் லோகேஷ் ( வயது 29) பெங்களூரில் உள்ள அமேசான் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். தற்போது வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ஜெயக்குமார் சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல பொள்ளாச்சி பக்கம் உள்ள புரவிபாளையம், பள்ளிவாசல் விதியை சேர்ந்தவர் மணிகண்டன்( வயது 45) இவருக்கு திருமணம் ஆகி 16ஆண்டுகள் ஆகிறது 3 மகள்கள் உள்ளனர். மணிகண்டன் குடிப்பழக்கம் உடையவர். இதனால் அவரது மனைவி நித்யா கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். மணிகண்டன் அவரது தாயார் வீட்டில் வசிக்கிறார்.நேற்று மணிகண்டன் புரவிபாளையத்தில் உள்ள அவரது மாமா வீட்டுக்கு குடிபோதையில் சென்றார். அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து வடக்கி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வால்பாறை பச்சைமலை தெற்கு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 40) இவர் கடந்த 15 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து வால்பாறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..