திடீர் பிரேக் போட்டதால் பைக்கில் இருந்து விழுந்து பெண் பரிதாப பலி ..

கோவை குறிச்சி ஆண்ட்ரூஸ் வீதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி விஜயலட்சுமி ( வயது 63)இவர் நேற்று தனது மகன் ஜெகதீஷ் ( வயது 42 )என்பவருடன் பைக்கில் இருகூர் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .அங்குள்ள ரயில்வே பாலம் அருகே சென்றபோது திடீரென்று பைக்கை பிரேக் போட்டார். அதனால் பின்னால் இருந்து விஜயலட்சுமி கீழே விழுந்தார். அவரது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது . போலீசார் பைக் ஓட்டி மகன் ஜெகதீஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.