15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 2 இளைஞர்கள் போக்சோவில் கைது.!!

கோவை: மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 15 வயது சிறுமி உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது . இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது மேட்டுப்பாளையம் சங்கர் நகரை சேர்ந்த கார்த்திக் ( வயது 19) என்பவர் அந்த பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு பழகுவதை நிறுத்தி விட்டார். அதன் பிறகு அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் (வயது 19) என்பவரும் காதலிப்பதாக ஆசை வார்த்தைக் காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..