காதலி பிரிந்து சென்ற விரக்தியில்… மதுவில் விஷம் கலந்து குடித்து காதலன் தற்கொலை..

கோவை அருகே உள்ள சின்ன தடாகம், ஆனைகட்டி ரோட்டை சேர்ந்தவர் சரவணன் ( வயது 42) கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர் இவர் ஏற்கனவே திருமணம் ஆன மகாலட்சுமி என்ற பெண்ணைகாதலித்து கடந்த 13 ஆண்டுகளாக அவருடன் வாழ்க்கை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் மனம் உடைந்த சரவணன் மதுவில் விஷம் கலந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார் .இது குறித்து தடாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.