பைக் விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாப பலி..

கோவை பேரூர் பக்கம் உள்ள குப்பனூரை சேர்ந்தவர் ராம்ராஜ். இவரது மகன் மோகன் குமார் (வயது 28) கோல்டு கவரிங் வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று குப்பனூர் மாதம் பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலைத்தடுமாறி  கீழே விழுந்தார் . இதில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல சூலூர் பக்கம் உள்ள பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் , இவரது மகன் மோகன் குமார் ( வயது 28) நேற்று பைக்கில் பாப்பம்பட்டி பிரிவில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது பைக்கும், அந்த வழியாக வந்த மற்றொரு பைக்கும் மோதிகொண்டன. இதில் மோகன் குமார் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மற்றொரு பைக் ஒட்டி வந்த கோமதி சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.