பறக்கும் படை சோதனையில் கேரள வாலிபரிடம் இருந்து ரூ.56 ஆயிரம் பறிமுதல்.!!

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள பெத்திக்குட்டை பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த மஜித் (வயது 38) என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ. 56 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்..