மது குடித்த 2 பேர் மயங்கி விழுந்து திடீர் மரணம் -போலீசார் விசாரணை..!

கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள பொன்னாக்காணியை சேர்ந்தவர் வேலுசாமி ( வயது 56 )விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 58) கூலித் தொழிலாளி. இவர்கள் இருவரும் நேற்று பனப்பட்டியில் இருந்து பொன்னாக் காணி செல்லும் பகுதியில் அமர்ந்து மது அருந்தி  கொண்டிருந்தனர். அப்போது சிறிது நேரத்தில் 2பேரும் மயங்கி விழுந்துள்ளனர். இதில் வேலுசாமி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் மனோகரனை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மனோகரனும் உயிரிழந்தார் .மது அருந்தி 2பேரும் சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்ததும் நெகமம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள் .வேலுச்சாமி மனோகரன் ஆகியோர் குடித்தது போலி மதுவா? அல்லது கள்ளச்சாரயமா? அல்லது மதுவில் ஏதாவது விஷம் கலந்து உள்ளதா ?என்று கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..