கோவையில் 9 மையங்களில் நாளை நீட் தேர்வு… 2,127 பேர் எழுதுகிறார்கள்.!!

கோவை மே 6 மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது .இதில் கோவை மாவட்டத்தில் 7,127 பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள் .இதற்காக 9 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த தேர்வு மையங்களுக்கு தனித்தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த தகவலை நீட் தேர்வு கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்..