மருதமலை கோவில் படிக்கட்டில் ஏறும்போது வியாபாரி திடீர் மரணம்..

கோவை சிங்காநல்லூர், வசந்தா மில் ரோட்டை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 48) மளிகை கடை நடத்தி வருகிறார்.இவர் நேற்று தனது மனைவியுடன் மருதமலை முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வழியாக கோவிலுக்கு நடந்து சென்றனர்.வழியில் அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது.மயங்கி விழுந்தார் . அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்.இதுகுறித்து வடவள்ளி போலீசில் அவரது மனைவி புகார் செய்துள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.