பைக்கில் இருந்து விழுந்து 2 பேர் பரிதாப பலி..

கோவை மாவட்டம் சிறுமுகை, சின்ன கள்ளிப்பட்டி, சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் நவீன் பி. டேனிக் ( வயது 44) இவர் நேற்று சிறுமுகை – சக்தி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது திடீரென்று கீழே விழுந்தார் .இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சராபத் அலி (வயது 31) இவர் மேட்டுப்பாளையம்- குரும்பனூர் விஸ்வநாத் நகரில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார் .நேற்று இவர்குரும்பனூர் – மேட்டுப்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் அப்போது திடீரென்று நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற் பட்டது .அவரை சிகிச்சை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார் .இது குறித்து அவரது மனைவி ஜாஸ்மினா மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.