கோவையில் ஜன்னல் கம்பி அறுத்து நகை திருட்டு – தொழிலாளி 2 பேர் கைது..!

மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை தாளத்துறை பகுதியைச் சேர்ந்தவர் மணியம்மாள் (வயது 55) இவர் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டு பூட்டிவிட்டு கோயிலுக்கு சென்றிருந்தார் .மாலையில் திரும்பி வந்து பார்ப்பது வீட்டில் ஜன்னல் கதவுகள் ரம்பத்தால் அறுக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில்இருந்த 3 பவுன் தங்க நகைகளை காணவில்லை .இது குறித்து சிறுமுகை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று சிறுமுகை போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர்கள் மணியம்மாள் வீட்டில் நகை திருடியதை ஒத்துக் கொண்டார்கள்.இதை யடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலையைச் சேர்ந்த வீரமணி (வயது 35) ஆகாஷ் (வயது 19) என்பதும்தெரியவந்தது. இவர்கள் காரமடை அருகே உள்ள தொட்டிபாளையத்தில் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வந்தனர். 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.