கோவை அருகே சுவரில் பைக் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு..

கோவை அருகே சுவரில் பைக் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு.. கோவை சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன் .இவரது மகன் ஸ்ரீ சக்தி (வயது 18) இவர் கோவை அரசு கலைக் கல்லூரியில் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகன் ,இவரது மகன் கண்ணன் (வயது 19) இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் .இவர்கள் இருவரும் நண்பர்கள் .இந்த நிலையில் ஸ்ரீ சக்திக்கு கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு பெற்றோர் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தனர் . நேற்று முன் தினம் ஸ்ரீ சக்தி தனது புதிய மோட்டார் சைக்கிளில் தனது நண்பரான ஜெகனை அழைத்துக் கொண்டு ஒண்டிப்புதூரில் உள்ள ஒரு தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றார். இரவு இரண்டாவது காட்சி பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பினர். சூலூர்சிந்தாமணிபுதூர் பைபாஸ் சாலையை கடக்கும் போதுதிடீரென்று மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனை காம்பவுண்ட் சுவரில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்தத 2 பேரும் அதே இடத்தில்ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள் . இது குறித்து தகவல் அறிந்தது சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இருவரது பிணங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காகசிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.