பெண்ணின் வீட்டு கதவை தட்டியதால் வாலிபருக்கு தர்ம அடி.. அவமானம் தாங்காமல் தற்கொலை

பெண்ணின் வீட்டு கதவை தட்டியதால் வாலிபருக்கு தர்ம அடி.. அவமானம் தாங்காமல் தற்கொலை.. தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் பாரதி கணேஷ் (வயது29 )இவர் கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதற்காக அன்னூர் பகுதியில் ஒரு வீட்டில் தன்நண்பருடன். தங்கியிருந்தார் இவர் தங்கி இருந்த வீட்டின் கீழ் பகுதியில் இளம்பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார் .இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்தப் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார் .அப்போது யாரோ கதவை தட்டும் போது சத்தம் கேட்டது. இதனால் அச்சத்துடன் அந்த பெண் கதவை திறநது பார்த்தார்.ஆனால் வெளியேயாரும் இல்லை. இதையடுத்து அந்த பெண் தனது குடும்பத்தினர் திரும்பி வந்ததும் யாரோ வீட்டு கதவை தட்டியது போன்று சத்தம் கேட்டது, கதை திறந்து பார்த்தால் ஒருவரும் இல்லை என்று கூறினார். இதனால் அவர்களுக்கு வீட்டின் மேல் மாடியில் வசிக்கும் பாரதி கணேஷ் மீது சந்தேகம் ஏற்பட்டது. அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் பாரதி கணேசனின் மோட்டார் சைக்கிளைஎடுத்து தங்கள் வீட்டின் உள்ளே வைத்துக் கொண்டனர். இதற்கிடையில் வெளியே செல்வதற்காக வந்த பாரதி கணேஷ் தனது மோட்டார் சைக்கிள் காணாததை கண்ட அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து தேடிப் பார்த்தார் மோட்டார் சைக்கிள் இளம் பெண்ணின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்தது. இது குறித்து அவர்களிடம் கேட்டார். .அப்போது பாரதி கணேசுக்கும் அந்த இளம் பெண்ணின்குடும்பத்தின ருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் பாரதி கணேசுக்கு தர்ம அடி கொடுத்தனர்.இதில் காயமடைந்த பாரதி கணேஷ் அன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர் வீடு திரும்பினார். நேற்று அதிகாலையில் வீட்டு மாடிப்படி அருகே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.பாரதி கணேசின்பெற்றோர்கள் உறவினர்கள் அன்னூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து இளம் பெண்ணின் குடும்பத்தினர் தாக்கிய அவமானத்தில் தான் பாரதி கணேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று புகார் தெரிவித்தனர்.இது குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..