தேங்காய் வியாபாரியிடம் ரூ 10 லட்சம் மோசடி..! 

தேங்காய் வியாபாரியிடம் ரூ 10 லட்சம் மோசடி..!  கோவை : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பக்கம் உள்ள கிறிஸ்டோபர் நகரை சேர்ந்தவர் விஷால் கிருஷ்ணன் (வயது 24) இவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார் . இவரிடம் 30- 8- 22 அன்று கோவை காந்திபுரம் 100 அடி ரோடு ராஜு நாயுடு வீதியை சேர்ந்த அன்வர் சதாத் ( வயது 52 )என்பவர் 17 ஆயிரம் கிலோ தேங்காய் வாங்கி இருந்தார். இதற்கு ரூ 3 லட்சம் மட்டும் கொடுத்து இருந்தார். மீதி பணத்திற்கு 2 காசோலைகள் கொடுத்தார். அந்த காசோலைக்கு வங்கியில் பணம் இல்லை.. மேற்படி நபர் 10 லட்சத்து 92 ஆயிரத்து 23 ரூபாயை கொடுக்காமல் மோசடி செய்து விட்டார்.இதுகுறித்து விஷால் கிருஷ்ணன் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார்.போலீசார் அன்வர் சதாத் மீது மோசடி உட்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..