கோவையில் கல்லூரி மாணவிகள் 2 பேர் எங்கோ மாயம்..!

கோவை துடியலூர் அருகே உள்ள என் .ஜி.ஜி. ஓ காலனி, அமராவதி நகரை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகள்  கீர்த்திகா( வயது 18) கோவையில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தாய் ஈஸ்வரி துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.

இதே போல மதுக்கரை அருகே உள்ள மரப்பாலம் நெடுஞ்செழியன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மகள்சுவேதா ( வயது 19 )இவர் கோவை புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார் .நேற்று முன் தினம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை .இது குறித்து இவரது தந்தை செல்வராஜ் மதுக்கரை போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் வைரம் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.