கோவை சிறுமிகள் 2 பேர் திடீர் மாயம்..!

கோவை செட்டிபாளையம் அருகே உள்ள பெரியகுயிலியை சேர்ந்தவர் 16 வயது இளம்பெண். வேலூர் பக்கம் உள்ள திருப்பத்தூரை சேர்ந்தவர் 15 வயது இளம் பெண் இவர்கள் இருவரும் சின்னக்குயிலியில் உள்ள தேங்காய் நார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த 14ஆம் தேதி இருவரும் வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டனர். இது குறித்து செட்டிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.